Ma Ra MaNam
அண்ணாமலையில் ம ர மண ம் வீசட்டும் திருவண்ணாமலை காந்தமாய் பலரையும் ஈர்த்த ஈர்கின்ற ஒரு ஊர், திருத்தலம். திருவண்ணாமலை , இயற்கையின் ஐந்து வித வெளிபாடுகளில் தீ யின் உருவாக்கமாய் , பஞ்சபூத தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. சைவ நெறியோரையும் தாண்டி உலகத்தில் ஏகாந்தத்தை விரும்பும் பலரையும் ஒன்றாக குவிய காரணமாய் இருக்கும் ரமண மகரிஷி, உலகத்தின் மலைகளுக்கெல்லாம் மூத்த "திரு அண்ணன்" மலையின் மகத்துவத்தை உலகம் முழுவதும் உணர பரவ மலையே எடுத்த அவதாரமாகவே பார்க்கப்படுபவர். அருணாசலம் என்கிற அசையா நெருப்பின் தாக்கம் மலையின் அருகே இருக்கும் அனைவரையும் தாக்குகிறது. மரங்களில்லாமல் இந்த அருணாசலம் வெறுமையாக இருப்பதை பிரதிபலிக்கவே திரு இரமண பகவான் வெறும் கோவணம் மட்டுமே உடுத்தி "தன்"னிலையை வெளிப்படுத்தியதாக நாம் கருத வேண்டியுள்ளது. அண்ணாமலையார் திருக் கோயிலின் தல விருட்சமாக (மரமாக) இருப்பது மகிழ மரம். அதாவது இந்தக் கோவில் மகிழ மரக்காட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அருணாசலேசுவரர் உள்ளம் குளிர வேண்டு மென்றால் அவர் "மகிழ" அண்ணாமலையெங்கும் மகிழ மரக் காடாய் ம...