Posts

Showing posts from January, 2022

திருவண்ணாமலையில் மலையை மீட்டு பழ மர கன்றுகள் நடப்பட்டது

Image
  திருவண்ணாமலையில் மலையை மீட்டு பழ மர கன்றுகள் நடப்பட்டது  கடந்த ஜூன் 2021 ல் நமது பொறுப்புள்ள குடிமக்கள்  இயக்கத்தின் இணையதளத்தில் நாம்  மேல்பாச்சார் - மோதக்கல் சாலையில்  உள்ள பெருமாள் அப்பன்  கோவில் மலையில் மர கன்றுகள் நட போவதை பற்றிய  திட்டத்தை  https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2021/06/hill-tree-rain-tiruvannamalai.html இந்த பதிவில் விரிவாக பதிவு செய்திருந்தோம். இதனை  நனவுபடுத்த நமது  இயக்கத்தின் சார்பாக நேரிலும்  தபால் மூலமாகவும் அலைபேசி  வாயிலாகவும் பல  முறை  உதவி திட்ட  இயக்குனர் (ஊரக  வளர்ச்சி )   திரு. லட்சுமி நரசிம்மன்   , ஊரக வளர்ச்சி அலுவலர்கள் திரு. . அமிர்த ராஜ்   ஆகியோரை  சந்தித்து இந்த மலையில் அடர்த்தியாக மரங்கள் நட்டு மலையை பராமரிக்க வேண்டியதன்  அவசியத்தை மேல்பாச்சார் கிராம ஊராட்சி நிர்வாகத்தின்  வாயிலாகவும் முயற்சித்தோம். இதற்கு நடுவில் இந்த  பகுதியில்  தொழிற் பேட்டை துவங்குவதற்கு நிலங்கள் கையகப்படுத்த போவதாக தகவல்கள் ...

Pongal Resolution Revolution

Image
 பொங்கல் உறுதி மொழி மாற்றத்தை தேடி இ ந்த தை பொங்கல் முதல் ஒவ்வொரு விவசாயியும் ஒரு உறுதி மொழி ஏற்க வேண்டும்.  க ரும்பை வெல்லமாக மட்டுமே மாற்றி விற்பேன் என்று. கரும்பில் இருக்கும் அனைத்து சத்துக்களையும் நீக்கி வெள்ளை சக்கரை ஆக்க விவசாயி துணை போகக் கூடாது. தன்னால் நாலு பேரின் ஆரோக்கியம் கெடக் கூடாது என்ற பொறுப்பு விவசாயிகளுக்கு இருக்க வேண்டும். விவசாயி சமுதாயத்தின் மீது பொறுப்பான பங்களிப்பை தந்தால் தான் சமுதாயமும் விவசாயியின் நலனில் அக்கறை கொள்ளும். தன்னால் எந்த அளவிற்கு வெல்லமாக மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு மட்டுமே விவசாயி கரும்பு சாகுபடி செய்ய வேண்டும். சக்கரை ஆலைகளுக்காக சாகுபடி செய்து செய்து விவசாயிகளை சாகும்படி நேர்ந்தது தான் யதார்த்தம். பா ரம்பரிய அரிசி ரகங்களை மட்டுமே பயிரிடுவேன் என்று விவசாயி சபதம் எடுக்க வேண்டும். அதுவும் அந்த நெல் ரகங்களை தாங்களே பாலிஷ் செய்யாத பழுத்த நிறங்களில் மட்டுமே நேரடியாக விற்போம் என்று உறுதி ஏற்க வேண்டும்.  பா ரம்பரிய நாட்டு ரக மாட்டு ரகங்களை வளர்ப்போம் என்றும் வருமானம் என்கிற போர்வையில் பால் நிறுவனங்களுக்காக சீமை பசுக்களை வளர்த்து தீவனச் ச...