Posts

Showing posts from December, 2023

Tea = Cyclone டீ = புயல்

Image
  டிசம்பர் 4, 2023 வட தமிழக நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வந்து பாதித்தது, அது போன்ற புயல் வெள்ளத்தை தவிர்ப்பதற்கு பொறுப்புள்ள குடிமக்களாய் நாம் என்ன செய்யலாம் என்று நமது பதிவில் நகர் விட்டு நகர் விளக்கியிருந்தோம். இதே மாதத்தில் தமிழக தென் மாவட்டங்கள் நான்கிலும் டிசம்பர் 17,18 தேதிகளில் வரலாறு காணாத பெரு மழை பெய்து இன்னமும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவ்ட்டங்கள் இயல்பு நிலைக்கு முழுமையாக திரும்பவில்லை. தாமிரபரணி ஆற்றில் ஒரு கட்டத்தில் ஒரு இலட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வெறும் 8000 கன அடி செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கே சென்னை வெள்ளத்தில் மிதந்தது. தாமிரபரணி சென்னையில் ஓடியிருந்தால் சென்னையில் ஒரு மாதமானாலும் வெள்ளம் இறங்கியிருக்காது உயிர் சேதம் பல இலட்சத்தில் போயிருக்கும். தாமிரபரணி பெரும்பாலும் கிராமங்கள் ஊடாக பாய்வதால் மக்கள் தொகை பரவலாக இருந்த காரணத்தினால் உயிர் சேதங்கள் பெருமளவு குறைவாக உள்ளது.  பருவமழையின் கர்ப்பம் கலைந்தது டிசம்பர் மாதம் - தமிழில் மார்கழி மாதம் பொதுவாக மழை பெய்யும் மாதம் இல்லை. ஆனால் இந்...

சென்னை வெள்ளம் சொல்லும் பாடம் நகர் விட்டு நகர்

Image
  மீண்டும் சென்னையில் வெள்ளம் மீளுமா  நகரம் ??? 2015 பிறகு மீண்டும்  அதே டிசம்பர் 4, ஆனால் வருடம் மட்டும் 2023.  நகரெங்கும் வெள்ளம் , வீடுகளுக்குள் தண்ணீர் , மக்கள் அவதி, பொருட்கள் சேதாரங்கள் , பாதித்த  வாழ்வாதாரங்கள், சலிப்புடன் மீண்டும்  தொடரும்  நெருக்கடி மிகு நகர வாழ்க்கை. மூன்று மாதத்தில் பெய்ய  வேண்டிய  மழை மூன்று நாட்களுக்குள் பெய்கிறது. புதிய தலைமுறை தொ.கா. காணொளி லிங்க்  https://youtu.be/SU8ACs-pfBU?si=QX24D28a_K24ofLj நம்மாழ்வார் அய்யா  அன்றே  சொன்னார். " இனி   புயல் மழை  தான் பருவ மழை கிடையாது " என்று.  புயல் மழையை தவிர்ப்பது எப்படி ?? தமிழரின் வாழ்வியல் முறைப்படி வந்த சொலவடை " மாதம்  மும்மாரி மழை ". ஆனால் இன்று  மாதம்  மும்மாரி பெய்கிறதா ??? இல்லை . ஏன் பெய்வதில்லை ??  பருவமழை பெய்ய  அடிப்படை தேவை நாட்டில்  உள்ள மலைகள்  அனைத்திலும் அடர்ந்த மரங்கள் மூடிய புற்களை கொண்ட  அடர்வனம்.  ஒவ்வொரு மரமும் தனது இலைகளில் பல இலட்சம்  லிட்டர்  தண்ணீராய் சேமிக்...