Posts

Showing posts from May, 2021

Tree Man Sunderlal Bahuguna Chipko

Image
            மரங்காவலர் சுந்தர்லால் பகுகுணா அய்யா படம் வரைந்துள்ள ஒவியர் திரு சதிஷ் ஆச்சார்யாவிற்கு நன்றி சிப்கோ இயக்க நிறுவனரும் சூழலியலாளருமான திரு. சுந்தர்லால் பகுகுணா  அய்யா இன்று 21.5.21 இயற்கேயோடு இரண்டற கலந்தார். மண்ணிற்கு உரமானார். சுந்தர்லால் பகுகுணா  (1927-2021) காந்தியவாதியும் இந்தியாவின் ஆரம்பகால சூழியல் போராளிகளில் ஒருவரும் ஆவார். இமையமலைக் காடுகளைக் காக்கும் பொருட்டு சிப்கோ இயக்கத்தைத் துவங்கினார். கனிமச் சுரங்கங்களாலும் பெரிய அணைக்கட்டுக்களாலும் ஏற்படும் சூழியல் அழிவுகளை எதிராகப் பல போராட்டங்களை ஒருங்கிணைத்துள்ளார். இமையமலைக் காடுகள் வேகமாக வெட்டி அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலங்களில் காடுகளைப் பாதுகாக்கும்பொருட்டு சிப்கோ இயக்கம் துவங்கப்பட்டது. 1970களில் இமியமலைப் பகுதிகளில் வெள்ளமும் நிலச்சரிவுகளும் வழக்கத்தைவிட அதிக அளவில் நிகழ்ந்தன. காடழிப்பும் பெரிய கட்டுமானங்களுமே அவற்றுக்குக் காரணம் என மக்கள் நினைத்தனர். இந்நிலையில் 1974ம் வருடம் மார்ச் 24ம் தேதி ரேனி என்னும் கிராமத்தின் ஆண்கள் எல்லாரும் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக ...

A Pedestrian Traffic Ramasamy

Image
சாலை வடிவமைப்பில் பாதசாரிக்கே முன்னுரிமை Pedestrian First priority in Road Design சென்னையில் பாதசாரிகளுக்காகவும் பல பொதுப் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து கொண்டே இருந்த சமுதாயத்திற்காகவே தன் வாழ்நாளின் கடைசி வரை போராடிய ஒரு போர் வீரர் நேற்று ( 4th May 2021 ) சென்னையில் உடல் நீத்தார்.  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அருகே உள்ள நடை பாதைகளில் மக்கள் நடைபாதையை அடைத்த கடைகளை அகற்ற தொடர் போராட்டம் நடத்தி தன் சொந்த பணத்தில் வழக்காடி வென்று பாதசாரியின் உரிமைகளையும் அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தார் டிராபிக் திரு. ராமசாமி அய்யா அவர்கள். இன்று சென்னை தி நகர் பாண்டி பஜார் உள்ள அகன்ற நடைபாதைகளை காணும் போதும் நாம் இந்த இடங்களில் எப்படி இட நெருக்கடியில் நடந்து சென்று இருக்கிறோம் அதனை எந்தளவிற்கு மக்கள் நடமாட வசதியாக விசாலமாக மாற்றியிருக்கிறார்கள் என்று பார்க்கும் போது இது சென்னை தானா என்ற ஆச்சரியம் வருகிறது. இதற்காக நாம் அன்றைய சென்னை மாநகரத்தின் மேயர் திரு. சைதை துரைசாமி அவர்களை சந்தித்து மனு கொடுத்ததும்,  அவர் அது குறித்து மிகவும் அக்கறையுடன் நடவடிக்கை எடுத்ததும் பல் வேறு துறைகளுக்க...