Posts

பொறுப்புள்ள ஆறுகள் Responsible Rivers

Responsible Rivers

Image
  பொறுப்புள்ள ஆறுகள்     ( English Version below the Tamil Version ) ஆறுகளை மீட்டெடுப்பதின் மூலம் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க முடியுமா ???   ஆறுகள் வெறும் தண்ணீரின் ஓட்டம் மட்டும் அல்ல.   அது என்றும் ஒரு நாகரீகத்தின் உயிரோட்டம். உலகத்தின் அனைத்து நாகரீகங்களும் ஒரு நதிக்க்ரையில் தான் ஆரம்பமாகியுள்ளது. சிந்து சமவெளி நாகரீகம், நைல் நதி நாகரீகம், கங்கை, காவிரி, வைகை, தாமிர பரணி என்று அனைத்தும் நாகரீகங்களின் தொட்டில்களாக இருந்து வருகின்றன.   ஒடும் ஆறுகள் இயற்கையின் வளத்தின் அடையாளங்கள். அவை நிலத்திற்கு வளங்களை கொடுத்து வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் உணவின் ஆதாரமாக விளங்குகிறது. இயற்கையின் வளங்கள் கூடக் கூட மனிதர்களின் மற்றும் அனைத்து உயிரினங்களின் பரிமான வளர்ச்சியும் கூடி அனைத்து இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழுவதற்கு வழிச் செய்கிறது. ஆனால் இயற்கையின் வளங்களை மனிதர்களால் சுரண்டப்படப்பட உலகில் பல்வேறு விதமான மோதல்களும் அதனால் அமைதியின்மையும் போர் போன்ற கிளர்ச்சிகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன. குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் பல நாடுகளில் மனிதர்களும் விலங்குகளு...

Road safety Audit by Students

Image
  I ndia is facing a Crisis on road accidents, deaths & injuries . In this scenario, collectively every citizen of India has to contribute for the road safety in the Country is the objective of Responsible Citizens iyakkam   ( RCi ) , in preparing this road safety audit questionnaire to be conducted by Sr School & College going students to make them aware about the ground situation and do their bit as a part of Social responsibility endevour . RCi welcomes every educational institution to encourage their students to participate in this activity to capture current situation in every street in their residential & educational institutional area. When every student individually / or as a group does the audit, the society will witness a change in road safety. Fill-up this Road safety audit form: இந்த சாலை பாதுகாப்பு கள் ஆய்வு வினாத்தாளை பூர்த்தி செய்யவும் https://forms.gle/1ZSRU2WTTAmMS2fc7   இந்தியாவில் சாலை விபத்துகள், இறப்புகள் மற்றும் காயங்கள் தொடர்பான நெருக்...

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Image
  மலையோர கிராமங்களில் , வனங்களுக்கு அருகே இருக்கும் கிராமங்களிலும் விவசாயிகள் அதிகம் சந்திக்கும் சவால்கள் விளை நிலங்களில் விளைவிக்கும் பயிர்களை காட்டு விலங்குகள் -காட்டு பன்றி, மான்கள், குரங்குகள், மயில்கள் போன்றவைகளும் மற்றும் பெரிய காடுகள் அருகே இருக்கும் வயல்களில் யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளும் பயிர்களை சேதப்படுத்துகின்றன. காட்டு விலங்குகள் காடுகளில் போதிய உணவில்ல்லாததால் தான் பெரும்பாலும் காடுகளுக்கு அருகே இருக்கும் வயல்களுக்கு உணவு தேடி வருகின்றன. இதனால் காட்டு விலங்குகளுக்கு நிரந்தரமாக உணவு கிடைக்க பல வகையான பழ மரங்களை வளர்க்கும் முயற்சிகளை தொடர்ந்து பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் முயன்று வருகிறது. கடந்த 30 நவம்பர் 2025 அன்று திருவண்ணாமலை மாவட்டம், மேல்பாச்சார் கிராமம் திரு தம்பி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மலையில் இருந்து ஓடி வரும் மழை நீரை தேக்குவதற்காக கட்டப்பட்டுள்ள்   கசிவு நீர் குட்டையில்  பழ மரக் கன்றுகளை நட்டோம்.  இயற்கை ஆர்வலர் திரு ரமேஷ் அனுமகொண்டா அவர்கள் இந்த மரக் கன்றுகளை ஏற்பாடு செய்தார். மா பலா கொய்யா நெல்லி சிறு நெல்லி மாத...

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

Image
காசி விஸ்வநாத்ர் ஆலயம் - குளம் மீட்டெடுத்து சுற்றி மரக் கன்றுகள் நட்டோம். மலையனூர் செக்கடி கிராமம், திருவண்ணாமலை மாவட்டம். Kasi Viswanathar Temple Tank encroachment removal & restoration of Temple Tank & tree plantation. Malayanoor Chekkadi Village, Tiruvannamalai District. காசி விஸ்வநாதர் கோவில் நிரவாகிகளின் திற்மையான செயல்பாட்டால் கோவிலின் குளம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது. அதனை சுத்தம் செய்து வேலி அமைத்து 21.9.2025 அன்று பலவித மரக் கன்றுகளையும் கிராமத்து பொறுப்புள்ள குடிமக்களின் முன்னெடுப்பால் மரங்களுக்கு குழிகள் எடுத்து மரங்கள் நட்டோம். With the efficient initiative of the Trustees of Kasi Viswanathar Kovil trust, encroachment around the Temple tank was removed, cleaned, fenced and then trees were planted by the Responsible Citizens of the Village. நூற்றுக் கணக்கான மரக் கன்றுகளை தருவித்து கிராமத்து இளம் தளிர்கள் புடை சூழ " மரங்களை காப்போம் " என்ற உறுதி மொழி எடுத்து மரங்களை நட்டோம். இந்த காணொளியை காணுங்கள்  https://youtu.be/COAmBuhvs04   Watch This video. Wi...

Inter-dependence day - Street Dog

Image
Independence for All .  It is actually a day to be celebrated for inter- dependence. Street dogs reduce : 1. Rodents population 2. Robbery in the locality &  Reciprocates love & care in abundance. Dogs are community animal from cave man days.  They belong to the streets as they are only born on streets.   பொறுப்புள்ள் குடிமக்கள் இயக்கம் Responsible Citizens iYakkam 15.8.25  

நம்மாழ்வார் தெரு- 5ம் ஆண்டு- இரண்டாம் நம்மாழ்வார்

Image
 நம்மாழ்வாரை தேடி-  பயணம் -2 நம்மாழ்வார் தெரு பெயர் பலகை இட்டு 5 வருடங்கள் நிறைவும் நம்மாழ்வார் அய்யாவின் 87 ம் பிறந்த நாளை கொண்டாடு விதமாக, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், மேல்பாச்சார் கிராமத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் இணைந்து கொண்டாடினோம். கடும் வெயில் நேரத்திலும் "இயற்கை திரும்பும் பாதை"யின் அவசியத்தை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் நிறுவனர் திரு. கிருஷ்ண குமார், இந்த கடும் வெயிலே நம்மாழ்வார் விட்டு சென்றுள்ள இயற்கை மீட்பு பணியை இன்னும் வீரியமாக செய்ய வேண்டியதன் அவசியத்தை அனைவருக்கும் விளக்கினார். இந்த கிராமத்தின் முன்னோடி இயற்கை வழி விவசாயி திரு தசரதனின் பிள்ளைகள் செல்வன். யோகேஷ், செல்வி வேணி, செல்வி புவி ஆகியோர் நம்மாழ்வார் பற்றிய தங்களின் புரிதலை மழலை மொழியில் வெளிப்படுத்தினர். தங்கள் தலைமுறையிலும் இயற்கை விவசாயத்தை கடைபிடிப்போம் என்று உறுதி மொழி அளித்தனர், நம்மாழ்வார் அய்யாவின் பிறந்த நாள் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யும் போது தான் திரு தசரதனின் பிறந்த நாள் பற்றிய குறிப்பும் கிடைத்தது . இது வரை வெறும் ஜாதக குறிப்பாக தமிழ் மாதமும் பிறந்த நட்ச...

நம்மாழ்வாரை தேடி - பயணம் 1

Image
                                   நம்மாழ்வாரை தேடி - பயணம் 1                                                                நம்மாழ்வார் ... நம்மை   ஆள்வார் 20ம் நூற்றாண்டு தொடங்கையதில் இருந்து இயற்கையின் மீது பல்ருக்கும் ஆர்வம் அதிகரித்து வந்தது. பலருக்கும் இயற்கையை பற்றிய சரியான புரிதலை பெற ஒரு வழிக்காட்டியை தேடி வந்தனர். அந்த சமயத்தில் இயற்கை வழியில் வாழ்வியலை அமைத்து கொள்ள ஒரு விடிவெள்ளியாக வழிக்காட்டியாக வந்தார் இயற்கை வழி வேளாண் விஞ்ஞானி திரு. கோ. நம்மாழவார். அந்த சமயத்தில்; அந்த காந்தத்தை அந்த ஏகாந்தம் மிகு வானகத்தில் கண்டு, உரையாடினோம் பலர். 2013ல் அவரின் பயிற்சி பட்டறையில் தீட்டப்பட்ட பொறுப்புள்ள இயற்கை ஆர்வலர்கள் பலர். அந்த படம் இதோ. அந்த படத்தில் இடது பக்க ஓரமாக குத்துகாலிட்டு கு...

நம்ம ஆழ்வார்களை போற்றுவோம் Hail Nammazhwars

Image
  இன்று (30.12.2024) இயற்கை வழி வேளாண் விஞ்ஞானி தெய்த்திரு. நம்மாழ்வார் அய்யா அவர்களின் 11வது ஆண்டு நினைவு நாள். அய்யாவின் உருவம் தான் மறைந்ததே அன்றி அவரின் உணர்வு இன்று எண்ணற்ற இயற்கை வழி விவசாயம் செய்யும் பல உழவர்களிடம் ஊடுபாவாக நிறைந்தே காணப்படுகிறது. கத்தியின்றி, இரத்தம் இன்றி ஒரு உண்மையான பசுமை புரட்சியை அய்யா பல்வேறு கிராமங்களுக்கும் நடந்து கூட சென்று பல நல்ல உள்ளங்களில் உள்ளொளியை ஏற்றி வைத்தார்கள். இன்று பல இளைஞர்களும் காணி நிலமாவது விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆர்வம் ஊட்டியவர் நம்மாழ்வார் அய்யா.  அவரின் பெயரின் மூலக் காரணமான முதலாம் நம்மாழ்வாரையும் இன்னாளில் நினைவு கூறுவோம். ஆழ்வார்கள் அனைவரும் மார்கழி மாதத்தை பெருமாளை முழுவதுமாக வணங்குவதற்குரிய மாதாமாக என்றும் கொண்டாடியவர்கள்.  முதலாம் நம்மாழ்வாரும் இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் இறைவனை கண்ட ஒரு சிறந்த தத்துவ பேரறிஞர். அவர் என்றென்றும் தான் பெற்ற ஞானத்தை ஒரு புளிய மரத்தினடியில் அமர்ந்தே அருளினார்கள். மரத்தினடியே இயற்கையில் இறைமையில் லயிக்க, பிரபஞ்ச பேராற்றலை உணர ஒரு உன்னத தலமாக போற்றியவர்.  நம் கால நம்மா...