Ma Ra MaNam
அண்ணாமலையார் திருக் கோயிலின் தல விருட்சமாக (மரமாக) இருப்பது மகிழ மரம். அதாவது இந்தக் கோவில் மகிழ மரக்காட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அருணாசலேசுவரர் உள்ளம் குளிர வேண்டு மென்றால் அவர் "மகிழ" அண்ணாமலையெங்கும் மகிழ மரக் காடாய் மாற வேண்டும், "சோணை" ஆறு மீண்டும் உயிர்தெழுந்து சிவன் தலை கங்கையாக ஓடி மகிழ வேண்டும். புள்ளி மான்களும் புலிகளும் இங்கு வரப் போகும் மழைக் காட்டினில் நட்புடன் "கிரிவலம்" வரவேண்டும்.
இது சாத்தியமா என்றால் நிச்சயம் சாத்தியம் என்கிறார் தனி ஒருவனாக 40 ஆண்டுகளில் பிரம்மபுத்திரா நதியினால் வெறும் மணத்திட்டான ஒரு தீவினை ஆயிரம் ஏக்கர் புலிகள் யானைகள் காட்டின் பல்லுயிர்களை மீட்டெடுத்துள்ள அசோமின் திரு ஜாதவ் பயேங்க்.
அண்ணாமலையிலும் பல ஆண்டுகளாக இரமண ஆசிரமம், The Forest Way , Annamalai Reforestation Society, மருதம்
பள்ளி , வனத்துறை மற்றும் பல தன்னார்வலர்கள் இந்த மலையின் பல பகுதிகளையும் இங்கு அடிவாரத்தில்
ஒரு நாற்று பண்ணையை உருவாக்கி பல ஆண்டுகளாக பசுமையாக்கி வருகின்றனர். இப்பொழுது பொது மக்கள் பலரும் இந்த மலையின்
மகிமையினால் ஈர்க்கப்பட்டு கிரிவலம் செய்ய நாட்டின பல இடங்களிலிருந்தும் வந்து
செல்கின்றனர். இதில் இந்த காட்டினை மீட்டுருவாக்க பொறுப்புள்ள குடிமக்கள் பலரும்
பொறுப்பாக இணைந்தால் அண்ணாமலை காடும், சோணை ஆறும் மீண்டும் உயிர் பெற்று நாடு வளம்
பெறும், எங்கும் மர மணம் கமழும், பல்லுயிர் பெருகும்.


Great initiative
ReplyDeleteYou deserve full appreciation ...
ReplyDelete